ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட உள்ளவருக்கே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க அக்கட்சி உயர்பீடம் உத்தேசித்திருக்கின்றன எனத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூடுகின்றது.
இதன்போது புதிய தலைவர் மற்றும் தேசியப்பட்டியல் பதவிகளுக்குப் பொருத்தமான ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன, ருவன் விஜேவர்தன எனப் பலரும் கட்சித் தலைவர் பதவிக்காக விருப்பம் கோரியுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை